திங்கள், 10 ஜனவரி, 2011

தமிழை வாழவைப்பது யார்???????






2050 வரை (no need up to 2015) திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?
இப்படித்தான்.


தமிழ்

Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.
11

முதலில்     "  கடவுள் வாழ்த்து  "


மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி


அடுத்து    மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரைஎழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது.    20ம்நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்துவடிவத்தை தந்தவர்.   அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல்இயற்றமிழ்இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டுபிடித்ததால் தான்கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரைதிருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்துஎழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான்திருக்குறளைஎழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.    திருக்குறள் மட்டுமல்லாமல்கருணாநிதிசிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணிகம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலிகூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர்தமிழை மட்டுமல்லபாரசீகம்உருதுவங்காளம்,இந்திதுளுமலையாளம்கன்னடம்தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதிதான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல்கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்றுவரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டிபல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவதுஎன்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்துஒன்று இரண்டாகஇரண்டு மூன்றாகபல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படிபெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாகஎப்படி  பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல்அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தைவைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப்பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால்சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,
கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

Right-click here to download pictures. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.
final_output

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள்சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாககருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தைகருணாநிதி என்பவர்கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன்தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனதுகுடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி...to be continyuet